திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!!

Read Time:1 Minute, 55 Second

968b0e58-f89f-41a7-8a23-65041e1ed556_S_secvpfவில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பேட்டை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது 28), கட்டிட தொழிலாளி.

இவருக்கும் ரெட்டிச்சாவடி அருகே கீழ் அழிஞ்சிபட்டு சங்கை நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் தனலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 15.9.2014 அன்று திருமணம் நடந்தது. தனலட்சுமி பிளஸ்–2 வரை படித்திருந்தார். ஆனால் செந்தாமரை கண்ணன் எதுவும் படிக்கவில்லை. கணவன் படிப்பறிவு இல்லாததை அவ்வப்போது தன் தாயிடம் கூறி தனலட்சுமி வருத்தப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தனலட்சுமியும் அவரது தாய் ஏகவள்ளியும் வில்லியனூர் அருகே பெருங்களூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றிருந்தனர். அப்போதும் தனலட்சுமி தனக்கு படிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்து விட்டீர்களே என்று மனம் வெதும்பினார். அப்போது ஏகவள்ளி தனது மகளுக்கு ஆறுதல் கூறி மனமாற்றம் செய்ய முயன்றார்.

ஆனாலும் சமாதானமடையாத தனலட்சுமி நேற்று இரவு உறவினர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தனலட்சுமிக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் வில்லியனூர் தாசில்தாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post STF துப்பாக்கிச்சூட்டில் STF உத்தியோகத்தர் பலி!!
Next post வத்திராயிருப்பு அருகே செங்கல் சூளை வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!