தேர்தல் சட்டம் மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை!!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைபடி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, 100 நாட்களில் எவ்வித யாப்பு திருத்தத்தையும் செய்ய முடியாது என நேற்று (26) மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அதனால் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
Average Rating