70% பாலியல் குற்றங்களுக்குக் காரணம் காதலர்களே!!
70 சதவீத பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் காதலர்களால் நடப்பதாக தெரியவந்துள்ளது.
மும்பை பொலிஸ் கமிஷனர் ரகேஷ் மரியா நிருபர்களிடம் கூறியதாவது:–
மும்பையில் நடப்பு 2014–ம் ஆண்டில் இதுவரை 542 பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதில் 389 பேர் காதலன் மற்றும் ஆண் நண்பர்களால் ஏமாற்றப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது 71.9 சதவீத பெண்கள் காதலன்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் காதல் வயப்பட்டதும் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி துஷ்பிரயோக குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.
6 சதவீதம் பேர் மட்டுமே அடையாளம் தெரியாத நபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதே அளவுக்கு உறவினர்களாலும், நன்கு அறிமுகமானவர்களாலும் ஏமாற்றப்படுகிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் அவமானம் கருதி தங்களுக்கு ஏற்பட்ட கதியை மறைத்து விடுகிறார்கள். அவர்கள் தைரியத்துடன் பொலிசில் புகார் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களை பற்றிய இரகசியங்கள் பாதுகாக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating