நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றில்..!!

Read Time:1 Minute, 55 Second

1819834781pnithyanandaபெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு ராமநகர் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சாமியார் மற்றும் அவரது சீடர்கள் 5 பேர் ஆஜரானார்கள். சி.ஐ.டி. பொலிஸ் துணை சூப்பிரண்டு லோகேஷ் தலைமையிலான குழுவினர் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அதில், ‘‘நித்யானந்தா நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் உறவு கொள்வதற்கான அனைத்து திறனும் அவரிடம் உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த அறிக்கையின் ஒரு நகல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைக்கு நித்யானந்தா சார்பில் ஆஜராக வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். குரல் சோதனை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார வழக்கில் சிக்கிய மற்றுமொரு நடிகை!!
Next post நாட்டில் தொடரும் மழை!