ஜனாதிபதி மஹிந்தவுக்கு வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்து!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.
காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரைநிகழ்த்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ளார். அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் போது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பூட்டான் பிரதமர் லைன் சென் செரின் தொபகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று குறிப்பிட்டார்.
நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுஜாதா கொய்ராலாவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Average Rating