கொலை வழக்கில் பொய் சாட்சி முன்வைத்த பொலிஸ் சார்ஜன் சிக்கினார்!!
2010ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றை மறைக்க விசாரணைகளின் போது, பொய் சாட்சியங்களை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கெகிராவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றியபோதே, இவர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் பொய் சாட்சியங்களை முன்வைத்துள்ளார்.
கெகிராவ பகுதி வியாபாரி ஒருவர் ரயில் பாதையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் ரயிலில் மோதியே உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் முறைப்பாடு வழங்கியதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டமையினாலேயே உயிரிழந்ததாக தெரியவந்தது.
இந்தநிலையில் குறித்த வழக்கில் ரயில் ஓட்டுனர் என போலிப் பெயர் ஒன்றில் குறித்த சார்ஜன் சாட்சிகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating