செய்யாறில் 9-ம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவி மாயம்!!
செய்யாறில் கல்லூரிக்கு சென்ற மாணவி, பள்ளிக்கு சென்ற மாணவன் ஆகியோரை காணவில்லை.
செய்யாறு டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி. கூலிதொழிலாளி. இவரது மகன் வினோத்(வயது 14). இவர் திருவோத்தூர் அரசுபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற வினோத் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவன் வினோத்தை தேடி வருகின்றனர்.
செய்யாறு அடுத்த பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (18)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செய்யாறு அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 24ம் தேதி காலை கல்லூரிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் செய்தனர்.
சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் குப்பன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன மாணவியை தேடி வருகிறார்.
Average Rating