தேவகோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை!!

Read Time:1 Minute, 55 Second

6e87590f-a66a-481a-956c-dc21e701a0ce_S_secvpfதேவகோட்டை அருகே திருமணமான 5 மாதத்தில் நடத்தை சந்தேகத்தால் மனமுடைந்த புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேவகோட்டை, திருவாடானை அருகே உள்ள காவனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது19).

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ் குமார் என்பவருக்கும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமார் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் ராஜ்குமார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

திருமணமான 5 மாதத்திலேயே கணவர் தனது நடத்தையில் சந்தேகமடைந்ததால் சவுந்தர்யா மன வேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தக் காதல் ஜோடி மீண்டும் இணையலாம்!!
Next post சேலம் காப்பகத்தில் இருந்து 2 பெண்கள் தப்பி ஓட்டம்!!