பரமத்திவேலூர் அருகே மாமனார் மீது கல்லூரி மாணவி செக்ஸ் புகார்!!

Read Time:4 Minute, 19 Second

14050138-a57c-412d-94de-e5c6e098bc96_S_secvpfபரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் ஐஸ்வர்யா (21). இதே பகுதியிலேயே வாவிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி–சரசு ஆகியோரின் மகன் பிரேம் நாத் என்பவர் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். ஐஸ்வர்யா அடிக்கடி அவரது கடைக்கு சென்று ரீசார்ஜ் செய்து வந்தார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாவி பாளையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் வசித்து வருகிறார்கள்.

தற்போது ஐஸ்வர்யா திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். காலையில் சீக்கிரமாக கடையை திறக்க பிரேம்நாத் சென்று விடுவார். பின்னர் இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புவார். அவரது தாய் சரசு அருகில் உள்ள ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் அவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

கல்லூரிக்கு சென்றுவிட்டு ஐஸ்வர்யா மாலையில் வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த நிலையில் மாணவி ஐஸ்வர்யா தனது மாமனார் கிருஷ்ணசாமி மீது பரமத்தி வேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது:–

எனது கணவர், எனது மாமியார் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தான் வருவார்கள். நான் அதுவரை வீட்டில் தனியாக இருப்பேன். அப்போது நான் குளிக்கும் போது அடிக்கடி எனது மாமனார் எட்டிப்பார்த்தார். சில நேரங்களில் என் அருகில் அமர்ந்து தோளில் கையை போட்டு சில்மிஷம் செய்தார். மேலும் எனக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்து வந்தார்.

இதையடுத்து அவரை பல முறை திட்டியும், எச்சரித்தும் கேட்கவில்லை. மேலும் எனது கணவரிடமும் சொன்னால் அதை கண்டுகொள்ளவில்லை. நான் கர்ப்பமாக இருந்தேன். இதை அறிந்த எனது மாமனார்–மாமியார் ஆகியோர் என் கருவை கலைக்குமாறு எனது கணவரிடம் கூறியுள்ளனர். அவர் என்னிடம் வந்து கருவை கலைக்க சொன்னார்.

இதற்கு நான் மறுத்துவிட்டேன். ஆனாலும் என் கணவர் அவரது தாய் சரசுவிடம் பணத்தை கொடுத்து நாமக்கல் அழைத்து சென்று ஐஸ்வர்யாவின் கருவை கலைத்து விடு என்று கூறினார். மேலும் கருவை கலைக்காவிட்டால் என்னுடன் நீ வாழ முடியாது என்றும் மிரட்டினார்.

இந்த நிலையில் மாமியார் என்னை அழைத்து சென்று கருவை கலைத்தார். மேலும் எனது கணவர் செல்போன் கடையை விரிவுப்படுத்த எனது பெற்றோரிடம் 30 பவுன் நகை அல்லது ரூ. 3 லட்சம் பணம் வாங்கி வா என்றார். நான் மறுத்துவிட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் என்னை அடித்து வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கணவர் பிரேம்நாத் மாமனார் கிருஷ்ணசாமி, மாமியார் சரசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70% பாலியல் குற்றங்களுக்குக் காரணம் காதலர்களே!!
Next post நான்கு பெண் சிறை அதிகாரிகளை கர்ப்பமாக்கிய கைதி!!