ஸ்பெயினில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது.!!

Read Time:2 Minute, 30 Second

spain-priests-720x480ஸ்பெயினில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைர்சர் தெரிவித்துள்ளார். துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் குறித்த நால்வரும் தன்னையும் இன்னும் சில குழந்தைகளையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கத்தோலிக்க தலைமைப்பீடமான போப்பாண்டவருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த முறைப்பாடினைத் தொடர்ந்து வத்திக்கானின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிசார் விசாரணை செய்ததில் ஸ்பெயினின் கிரனடாவில் 3 பாதிரிமாரும் ஒரு சமய போதகரும் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது. அதனால் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களது பெயர் விபரங்களை வெளியிட பொலிசார் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

ஸ்பெயினின் கிரனடாவில் கத்தோலிக்க பாதிரிமார் இத்தகைய பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் போப்பாண்டவர் இது குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறைக்காக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் போப்புக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நால்வரும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையில் பாலியல் துஸ்பிரயோகச் செயலில் ஈடுப்பட்ட 10 பாதிரியார்கள் திருச்சபையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண மண்டபத்தில் மணமகள் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது!!
Next post தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!