திருமண மண்டபத்தில் மணமகள் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது!!
Read Time:1 Minute, 13 Second
திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நளினா (வயது 21), பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது திருமணம் நேற்று பக்கத்து கிராமமான வதிஷ்டபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு 2 சிறுவர்கள் மணமகள் அறைக்குள் புகுந்தனர். அங்கு நளினா வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிகொண்டு வெளியே வந்தனர்.
அதனை கண்ட நளினாவின் உறவினர்கள் சிலர், அந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த சிறுவர்களை திட்டக்குடி போலீசில் ஒப்படைத்தனர். திருடப்பட்ட செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 சிறுவர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். கைதான 2 பேரும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
Average Rating