திருமண மண்டபத்தில் மணமகள் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது!!

Read Time:1 Minute, 13 Second

c5e361cc-46f2-49e5-9102-0d57aea4733a_S_secvpfதிட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நளினா (வயது 21), பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது திருமணம் நேற்று பக்கத்து கிராமமான வதிஷ்டபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு 2 சிறுவர்கள் மணமகள் அறைக்குள் புகுந்தனர். அங்கு நளினா வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிகொண்டு வெளியே வந்தனர்.

அதனை கண்ட நளினாவின் உறவினர்கள் சிலர், அந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த சிறுவர்களை திட்டக்குடி போலீசில் ஒப்படைத்தனர். திருடப்பட்ட செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 2 சிறுவர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். கைதான 2 பேரும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வதந்திகளை பரப்பாதீர்கள்! முன்னாள் கவர்ச்சிக் கன்னி காட்டம்!!
Next post ஸ்பெயினில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது.!!