தக்கலை அருகே கள்ளக்காதலனால் கர்ப்பமான பெண்: கணவனுடன் செல்ல மறுப்பு!!
தக்கலையை அடுத்த புதுக்காடு வெட்டி விளையைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வனிதா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சதீஷ் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வனிதாவை காணவில்லை. குழந்தையும் வீட்டில் இல்லை. இதுபற்றி சதீஷ், தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வனிதாவை தேடி வந்தனர்.
கடந்த 8 மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டையில் வனிதா அருமனை பகுதியில் ஒரு கூலித்தொழிலாளியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் அங்கு சென்று வனிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் பிடித்து தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சதீஷ் போலீஸ் நிலையம் வந்தார்.
அவரது முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வனிதா, கணவருடன் செல்ல மறுத்தார். அவர், குடிபோதையில் அடிக்கடி தன்னுடன் தகராறு செய்ததாகவும், இனியும் அவருடன் வாழ முடியாது என்றும் கூறி விட்டார். மேலும் அவர், கள்ளக்காதலனுடன் 8 மாதங்கள் குடும்பம் நடத்தியதில் அவர் கர்ப்பமான விபரமும் தெரிய வந்தது. இதனால் போலீசார் எதுவும் செய்ய முடியாமல் திகைத்தனர்.
இந்த நிலையில் பெற்றோருடன் போவதாக போலீசாரிடம் கூறி விட்டு வெளியே வந்த வனிதா, மீண்டும் கள்ளக்காதலனுடன் ஏற்கனவே அவர்கள் குடியிருந்த பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
Average Rating