திசைமாறி வந்த மூன்று தமிழக மீனவர்கள் கைது!!

Read Time:1 Minute, 45 Second

560452461Untitled-1தமிழகத்தின் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, கடல் சீற்றத்தால் திசை மாறிச் சென்ற மீனவர்கள் மூவர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புஷ்பவனம் மீனவர் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் (30), என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (30), ஜோதிமணி (45), காளிதாஸ் (35), ஆகியோர் கடந்த 26ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

ஆனால் மாலை வரை, மீனவர்கள் கரை திரும்பாததால், கிராம பஞ்சாயத்தார், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கடலுக்கு சென்று திரும்பாததால், அரசு உத்தரவுப்படி, காரைக்கால் கடலோர காவல்படையினர், கப்பல் மூலம், மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக திசைமாறி சென்ற மீனவர்களை, இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

அனுமதி இன்றி இலங்கை பகுதிக்கு சென்ற தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் பொலிஸார் சிறை பிடித்துள்ளனர். அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு புஷ்பவனம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைவு!!
Next post ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு!!