நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!
கோவை மாவட்டம் போத்தனூர் அன்னாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோகிலா (வயது 22). இவர் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை பார்த்த குறிச்சி ஆண்டவர் தோட்டத்தை சேர்ந்த மகேஷ்குமார் என்ற வாலிபர் கோகிலாவுடன் நட்பாக பழகி வந்தார்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. கடந்த 1½ ஆண்டாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் மகேஷ்குமார் வேலையில் இருந்து நின்று விட்டார். நாளடைவில் மகேஷ்குமாரின் போக்கு மாறத்தொடங்கியது. அவரது போக்கு பிடிக்காமல் கோகிலா தனது காதலை கைவிட்டார். மகேஷ்குமாரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக கோகிலா நிறுவனத்திலிருந்து செட்டிபாளையம் – ஈச்சனாரி ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தார். மகேஷ்குமார் அதே பகுதியில் கோகிலாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கோகிலாவை கண்டதும் தயாராக வைத்திருந்த தாலியை எடுத்துக் கொண்டு கோகிலாவிடம் சென்ற மகேஷ்குமார் ரோட்டில் வைத்து தாலிகட்ட முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத கோகிலா காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச்சென்று மகேஷ்குமாரிடம் இருந்து கோகிலாவை மீட்டனர்.
தொடர்ந்து மகேஷ் குமாருக்கு தர்மஅடி கொடுத்தனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பித்த மகேஷ்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து கோகிலா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இனஸ்பெக்டர் சக்திவேல் உத்தரவின் பேரில் சப்–இனஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் மகேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சுந்தராபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த மகேஷ் குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating