ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கடத்தி, பணம் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்ற சிறுவன் கைது!!

Read Time:3 Minute, 41 Second

b2fb067d-15f1-43d5-962f-431898c927c4_S_secvpfமத்திய டெல்லியில் உள்ள ரஞ்சித் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பழ வியாபாரியின் மகன் கணேஷ்(6), கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம் போல் விளையாட வெளியே சென்றான். இரவு வெகு நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாத நிலையில் கணேஷின் தந்தைக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

எதிர் முனையில் பேசிய நபர், உன் மகனை நான் கடத்தி வைத்துள்ளேன். அவனை உயிருடன் பார்க்க ஆசைப்பட்டால் நாளைக்குள் ஒன்றரை லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்து வைத்துக் கொள். மறுபடியும் உனக்கு நாளை போன் செய்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.

பதறிப்போன அந்த பழ வியாபாரி, தனது மகன் கடத்தப்பட்டது மற்றும் பிணையத் தொகை கேட்டு அழைப்பு வந்தது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். கடத்தல்காரனிடம் இருந்து கணேஷை மீட்க தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், நரைனா பகுதியில் உள்ள சத்யா பூங்காவின் அருகே ஒரு சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பிணத்தை கைப்பற்றியபோது அது காணாமல் போன கணேசின் சடலம் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சுறுசுறுப்படைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். காணாமல் போன அன்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனுடன் இதே பூங்கா அருகில் கணேஷ் விளையாடிக் கொண்டிருந்ததாக அறிந்தனர். உடனடியாக அந்த சிறுவனின் வீட்டுக்குச் சென்றனர்.

17 வயது சிறுவனான அவனிடம், பெற்றோர் முன்னிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படத் தொடங்கியது.

விலையுயர்ந்த வெளிநாட்டு ‘ஐபோன்’ ஒன்றை வாங்கும் ஆசையில் கணேஷை கடத்தி அவனது தந்தையிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், பணமும் வந்து சேராத நிலையில் கணேஷ் தன்னை காட்டிக் கொடுத்து விடுவானோ என்ற பயத்தில் அவனது கழுத்தை அறுத்துக் கொன்று விட்டதாகவும் அவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தான்.

இந்த கொலையை செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் வீட்டுக்கு வந்த அவன், ரத்தக் கறை படிந்த உடைகளை எல்லாம் கழற்றி, வீட்டின் ஒருபகுதியில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்த போலீசார், அவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறார் காப்பகத்தில் அடைத்துள்ளனர்.

தனது வீட்டுக்கு அருகில் வசிக்கு ஒரு குடும்பத் தலைவியின் சிம் கார்டைத் திருடி, கணேஷின் தந்தையான பழ வியாபாரிக்கு அவன் மிரட்டல் அழைப்பு விடுத்ததும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோலி – அனுஷ்கா பற்றிய அந்தத் தகவல் பொய்!!
Next post விஷால் படுகாயம் – படப்பிடிப்பு இரத்து!!