எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை!!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை (சிக்னல்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
சர்வதேசத் தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமத்தின் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தொடக்க விழாவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு மிகவும் கவனமுடன் கையாண்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் எல்லை தாண்டிச் சென்று விடுவதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.
Average Rating