மலைக்கோட்டையில் பெண் மர்மச்சாவு: மகனை பிடித்து போலீசார் விசாரணை!!

Read Time:1 Minute, 12 Second

e39a38e9-d2df-41f4-862e-b955a46f233f_S_secvpfதிருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முனிபிச்சை. இவரது மனைவி தெரசாள்மேரி (வயது65). இவர் இன்று மதியம் இ.பி. ரோடு பூங்கா அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த அந்த பகுதியினர் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் தெரசாள் மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் அந்தபகுதியில் விசாரணை நடத்திய போது இறந்து போன தெரசாள்மேரியின் மகன் சற்று நேரத்திற்கு முன்பு அவரை இழுத்து சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் தெரசாள்மேரியின் மகனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பிரபல நடிகர் சிக்கினார்!!
Next post காவியத்தலைவன் (விமர்சனம்)!!