திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்!!

Read Time:2 Minute, 59 Second

73de032b-dc32-40a8-abc1-2ece7130a24a_S_secvpfதிருவனந்தபுரம் அருகே மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள காலனி என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது தாயார் மகளை பல இடங்களிலும் தேடினார்.

ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடினார்கள். மேலும் அந்த பெண்ணின் வீட்டு அருகே வசிப்பவர்களிடமும் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவனந்தபுரம் அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் மாயமான இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் அந்த பெண் சென்றதை பார்த்ததாகவும் போலீசாரிடம் சிலர் தெரிவித்தனர்.

இந்த தகவலை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். தம்பானூர் அருகே செங்கோட்டு கோணம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரும் போலீசில் சிக்கினார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அந்த வாலிபர் இளம்பெண்ணை ஏமாற்றி அந்த வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு வாரமாக அடைத்து வைத்து கற்பழித்தது தெரிய வந்தது. உடனே அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதை உறுதி செய்வதற்காக அவரது ரத்தத்தை போலீசார் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் பாதித்த நிலையிலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அந்த வாலிபர் சீரழித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவியத்தலைவன் (விமர்சனம்)!!
Next post சன்னி லியோனுடன் நடிக்க தயார் – ஜொள்ளிய நடிகர்!!