சேலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப சாவு!!
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை அடுத்த பெரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முனிக்குமார் ( 35). இவரது மனைவி பிரபாவதி ( 29). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாவதி 4–வதாக கர்ப்பம் ஆனார் .
கடந்த 22–ந் தேதி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் 23–ந் தேதி சேலம் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் அந்தப்பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலை மோசம் அடையவே அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating