திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்!!
Read Time:1 Minute, 15 Second
நத்தம் அருகே உள்ள காட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் வையன். இவரது மகள் அருண்மொழி(வயது 16). இவருக்கும், நத்தத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன்(25) என்ற வாலிபருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
சம்பவத்தன்று அருண்மொழி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குறிஞ்சிநாதன் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்று விட்டார். வேலைக்கு சென்று இருந்த பெற்றோர் வீடு திரும்பியதும் மகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரித்தபோது நத்தத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன் மகளை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மைனர் பெண்ணை கடத்தி சென்ற குறிஞ்சிநாதன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் தமிழ்முகம், தாய் காஸ்மீனா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Average Rating