தேனி அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!!

Read Time:1 Minute, 40 Second

8d708d37-6d61-4506-9393-d44b3f16e365_S_secvpfதேனி அருகே உள்ள கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஷிபாவுதீன். இவரது மகள் வசீமாபேகம் (வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். மாதாந்திர தேர்வில் அவர் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களே பெற்று வந்துள்ளார்.

இதனை வீட்டில் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வசீமாபேகம் மனம் உடைந்தார். இந்த நிலையில் அடிக்கடி வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த வசீமாபேகத்தை பெற்றோர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து. விவசாயி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்தார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!
Next post பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பிரபல நடிகர் சிக்கினார்!!