பொது எதிரணிகளின் உடன்படிக்கை கைச்சாத்து!!
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையின் பின்னர் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
உடன்படிக்கையில் மாதுளுவாவே சோபித தேரர், கிராம்பே ஆனந்த தேரர், அத்துரலியே ரத்ன தேரர், தீனியாவெல பாலித தேரர், ரீ செல்டன் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன், சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி, ஹமால் நிலங்க, ஆரியவன்ஸ திஸாநாயக்க, சாமிலா பெரேரா,
அருண சொய்ஸா, லால் விஜயநாயக்க இராஜ உஸ்வெட்ட கெய்யா, ஸ்ரீமஸ்ரீ கப்பு ஆராய்ச்சி, சமன் ரத்னபிரிய, சுசின் ஜயசேகர, எல்மோ பெரேரா, நிர்மல் ரஞ்ஜித் தேவசிறி, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜயசிங்க ஜே.எஸ். குருப்பு, தாம் விமலசேன, நஜா முகம்மட், கெமுனு விஜயரட்ண, பேர்சி விக்ரமசேகர, சிரால் லக்திலக ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Average Rating