அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – இந்தியா!!
Read Time:1 Minute, 14 Second
அரசமைப்பு பொறிமுறையொன்றின் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, அந்தஸ்த்து என்பனவற்றை இலங்கை அரசாங்கம் வழங்வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை குறை சொல்பவர்கள், இலங்கையையோ அல்லது சீனாவையோ அல்லது வேறு எந்த அயல்நாட்டையோ இந்தியா பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் நடவடிக்கையின் பின்னரே இலங்கை அரசாங்கம் மரணதண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தது. இந்த உறவு தொடரவேண்டும்.
மீனவர்களை துரிதமாக விடுதலை செய்வது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating