நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் கடமை!!
பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாறாது அரசின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப இணைய வேண்டியது அனைவரதும் பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்திரத்தன்மை அற்ற அரசாங்கத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நூல் பாவை போன்ற தலைவர்களை ஆட்சியில் அமர்த்தி நாட்டிற்கு தேவையற்ற தலையெழுத்தை எழுத மேற்குலக சக்திகள் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சமாதான சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட நாட்டை வேறு வழியில் எவருக்கும் அடிமைப்படுத்த முடியாது என்றும் எதிர்கால சந்ததிக்காக நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை கலாசாரத்துடன் மேற்குலக கலாசாரத்தை புகுத்த இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
Average Rating