ஜனாதிபதி மஹிந்த சார்பில் சுசில் கட்டுப்பணம் செலுத்தினார்!!
Read Time:52 Second
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு இன்று காலை சென்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சில கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating