FILE இருந்தால் 24 மணிநேரத்தில் அம்பலப்படுத்தவும் – ஜனாதிபதியிடம் நவீன் கோரிக்கை!!
Read Time:1 Minute, 24 Second
அரசாங்கத்தில் இருந்து மேலும் சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு இன்று (01) காலை சென்ற நவீன் திஸாநாயக்க அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் வெளிப்படை தன்மைக் கொண்ட ஜனாதிபதி முறையொன்றை ஏற்படுத்த செயற்படுவதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தன்னுடைய கோவை ஜனாதிபதியிடம் இருந்தால் அதனை 24 மணிநேரத்திற்குள் வெளியிடுமாறு நவீன் திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை என அவர் கூறினார்.
Average Rating