வீட்டு சுவரில் 4 ஆண்டு சிறை வைக்கப்பட்ட சிறுவன்!!
அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் கிரேகர் ஜீன் (37). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேகர் ஜீனின் 13 வயது மகன் அவரை பார்ப்பதற்காக புளோரிடா வந்தான். அதன் பின்னர் அவன் மீண்டும் திரும்பவில்லை.
அது குறித்து கேட்ட போது அவன் மீண்டும் தனது தாயிடம் செல்வதாக கூறி புறப்பட்டான் என அவர் தெரிவித்து விட்டார். இதற்கிடையே ஒரு நாள் அச்சிறுவன் தனது தாயாருக்கு டெலிபோன் செய்தான்.
அப்போது என்னை தந்தை அட்லாண்டாவில் உள்ள வீட்டில் அடைத்து சிறை வைத்துள்ளார் என தெரிவித்தான். உடனே போலீசாரிடம் தாயார் புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கிரேகரி ஜீன் வீட்டில் துருவி துருவி சோதனை நடத்தினார்.
இருந்தும் அவனை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சந்தேகத்தின் பேரில் மீண்டும் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் கை–கால், கண் துடைக்க பயன்படும் துண்டுகளால் பொய்யான சுவர் அமைத்து அதற்கு பின்புறம் மகனை சிறை வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை வைக்கப்பட்ட சிறுவனை மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் தந்தை கிரேகர் ஜீன், வளர்ப்புத்தாய் (தந்தையின் 2–வது மனைவி) சமந்தா ஜாய் டேவிஸ் (42) மற்றும் 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Average Rating