புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 35 Second

a2072862-f3fc-4e8c-b106-4e761ee391be_S_secvpfமேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்டத்தின் அஹலிடிப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரால் கற்பழிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு காரணமான நபரின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குற்றவாளியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரித்து வந்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஜாமினில் வெளியே வந்ததையடுத்து, போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த வாலிபரின் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. இதனால், கடந்த சில நாட்களாக அந்த குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேர்ந்தது.

இந்நிலையில், ‘நம்மால் தானே நமது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் வேதனை’ என்று நினைத்த அந்த சிறுமி, வீட்டின் உள்ளறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லதா ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!!
Next post காஞ்சீபுரம் அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் பிணம்: போலீசார் விசாரணை!!