ராஜாக்கமங்கலத்தில் காதலிப்பதாக நடித்து இளம்பெண் கற்பழிப்பு!!
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 21). தொழிலாளி. கணபதிபுரம் தெக்குறிச்சியை சேர்ந்தவர் ராணி(21 –பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
வேலைக்கு சென்று வந்த இடத்தில் ராணிக்கும், சுயம்பு லிங்கத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சுயம்புலிங்கம் ராணியை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகினார். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக ராணி கர்ப்பமானார். எனவே ராணி, சுயம்புலிங்கத்திடம் தான் கர்ப்பமடைந்த விவரத்தை கூறி உடனே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் சுயம்புலிங்கம் ராணியிடம் பிடி கொடுக்காமல் நழுவினார். இது ராணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே, ராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலன் சுயம்புலிங்கத்திடம், நான் இப்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறேன், நீங்கள் என்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சுயம்புலிங்கம் இனிமேல் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் உன் குடும்பத்தையே தீ வைத்து கொளுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து ராணி நேற்று ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜபால்(பொறுப்பு) விசாரணை நடத்தி சுயம்புலிங்கத்தை கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376(கற்பழிப்பு), 417(திருமண ஆசை காட்டி மோசடி செய்தல்), 506(2)–ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுயம்புலிங்கம் ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடத்தி சென்றதாகவும் போலீசில் புகார் உள்ளது. இவர் காதல் போர்வையில் இது போல மேலும் பல பெண்களை மயக்கியவர் எனவும், பின்னர் அந்த பெண்களை அனுபவித்து விட்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு விலகி சென்று விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating