மறைமலைநகரில் கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை!!

Read Time:2 Minute, 30 Second

6894cbba-bf75-4c02-9127-7008436875fd_S_secvpfமறைமலைநகரை அடுத்த நின்னகாட்டூர் வில்லியர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (வயது52). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லில்லிராணி (45). மகன் பிரின்ஸ் (26). மகள் டயானா மேரி திருமணமாகி திருநெல்வேலியில் கணவருடன் வசித்து வருகிறார்.

பிரின்சுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே அவரது மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ராஜன், அவரது மனைவி லில்லிராணி, மகன் பிரின்ஸ் ஆகியோர் சோகம் அடைந்தனர். மனவேதனையில் இருந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

நேற்று இரவு 3 பேரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் ராஜன் – லில்லிராணி பரிதாபமாக இறந்தனர். பிரின்ஸ் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறைமலைநகர் போலீசார் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது ராஜன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் எழுதி இருந்ததாவது:–

காவல்துறை அதகாரிகளுக்கு எழுதிக் கொள்வது, நாங்கள் வாழ்க்கையை வெறுத்து விட்டோம். சாக முடிவு செய்து உள்ளோம். யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லை.

எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் அனாதைகள். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். எனது சொத்துக்களை மகள் டயானாகுமாரியிடம் ஒப்படையுங்கள்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பில்!!
Next post வீட்டு சுவரில் 4 ஆண்டு சிறை வைக்கப்பட்ட சிறுவன்!!