புலிகள் மீதான தடை: ஐரோப்பிய ஒன்றியம், மேன்முறையீடு
தமிழீழ விடுதலைப் புலிகளை வகைப்படுத்தல், அதன் நிதியங்களை முடக்குதல் தொடர்பான பொது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றிய பேரவை தீர்மானித்துள்ளதென அப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றிய பேரவை எடுத்த நடவடிக்கைகளை குறிப்பாக புலிகள் பயங்கரவாத இயக்கமென வகைப்படுத்தியதையும் அதன் நிதிகளை முடக்கியதையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பொது நீதிமன்றத்தின் தீர்ப்பு வறிதாக்கியது என பேரவை இந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு செயன்முறை அடிப்படையிலானது. இது தமிழிழ விடுதலை புலிகள் பயங்கரவாத இயக்கமென வகைப்படுத்தியதை அல்லது புலிகளின் நிதியை முடக்கியதை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்டது.
பொது நிலைப்பாடு 2001ஃ;931 கூறப்பட்டவாறு, புலிகளை பயங்கரவாத இயக்கமென வகைப்படுத்தியதில் நீதிமன்றின் கருத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியப் பேரவை இப்போது தீர்மானித்துள்ளது.
இந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு வரும் வரையில், முன்னைய தீர்ப்பு செயற்பட முடியாது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating