பெண்களிடம் கிண்டல்: குடிபோதை வாலிபர்களை தாக்கிய எம்.எல்.ஏ.!!
Read Time:1 Minute, 2 Second
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மலாஹர்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் குடிபோதையில் இருந்த 15 வாலிபர்கள் பெண்களையும், மாணவிகளையும், கேலி கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.
உடனே உள்ளூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுதர்சன் குப்தா அங்கு சென்று குடிபோதை வாலிபர்களை அடித்து உதைத்தார். அவருடன் பெண்களும் சேர்ந்து அடித்து உதைத்து 15 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதா? என்றும் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
Average Rating