இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் ரவுடி மீது 4 பிரிவில் வழக்கு!!
மருங்கூர் அருகே உள்ள அழகனாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி(வயது 20).
இதே பகுதியை சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன்(33). கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் விழுந்த தேங்காயை எடுத்தார். இதைப்பார்த்த தங்க கிருஷ்ணன் தோப்பு உரிமையாளரிடம் புகார் செய்தார்.
உடனே அய்யப்பன் இதை போய் ஏன் தோப்பு உரிமையாளரிடம் சொன்னாய்? என்று கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அய்யப்பன் மனைவி சுகந்தி அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தங்க கிருஷ்ணன் குருவி சுடும் துப்பாக்கியை காட்டி சுகந்தியை மிரட்டினார். மேலும், ஆபாச வார்த்தைகளால் அவரை திட்டினார்.
இதுகுறித்து சுகந்தி அஞ்சு கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தங்க கிருஷ்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆயுத தடை சட்டம் மற்றும் ஆபாச வார்த்தைகள் பேசுதல், ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜபால், சப்–இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி ஆகியோர் விசாரணை நடத்தி தங்க கிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில் தங்ககி ருஷ்ணன் மீது ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் மாருதி அடிகளார் கொலை வழக்கு, கோட்டாரில் கிருஷ்ணன மூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்பட 4 வழக்குகள் இருப்பதும், இவர் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட தங்க கிருஷ்ணன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
Average Rating