காதல் தோல்வி: 4–வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!

Read Time:2 Minute, 21 Second

2e6cc88c-4162-4be1-9387-6f47dc0b9059_S_secvpfதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் பிரித்தி (19).

இவர் துரைப்பாக்கம் மேட்டுகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரித்தி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். திடீரென அந்த வாலிபர் பிரித்தியை பிடிக்கவில்லை என்று கூறி பிரிந்தார்.

இந்த காதல் தோல்வி பிரித்தியை பலமாக தாக்கியது. அவர் மனமுடைந்து சோகமாக காணப்பட்டார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

நேற்று காலையில் விடுதியின் 4–வது மாடியில் இருந்து குதிக்க முயன்றார். அப்போது சக மாணவிகள் அவரை தடுத்து விட்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் 4–வது மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் யாரும் இல்லை. உடனே மேல் இருந்து கீழே குதித்தார்.

கீழே மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி சேறும் சகதியாக கிடந்தது. இதனால் பிரித்தி கீழே விழும்போது பலத்த அடிபடவில்லை. பின்னர் அவரை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரித்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கீழே தண்ணீர் மட்டும் இல்லாமல் இருந்தால் அது பிரித்தியின் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என சக மாணவிகள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் ரவுடி மீது 4 பிரிவில் வழக்கு!!
Next post சிகிச்சைக்கு சென்ற இடத்தில் அத்துமீறல்: நர்சை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!!