சிகிச்சைக்கு சென்ற இடத்தில் அத்துமீறல்: நர்சை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 53 Second

cd231913-1420-4c37-a303-906817abad77_S_secvpfகோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட்டில் தொழிலாளர்களுக்கான தனியார் எஸ்டேட் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நர்சாக இருப்பவர் கீதா (வயது 60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 25 ஆண்டுகளாக இதே ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல் நேற்றும் மதிய பணிக்கு கீதா சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் சிகிச்சைக்காக வந்தார். அவரிடம் கீதா விசாரித்தபோது முடீஸ் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி (30) என்பதும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து சிகிச்சை அளிப்பதற்காக டாக்டரை அழைக்க கீதா மாடியில் உள்ள டாக்டர் அறைக்கு சென்றார். அப்போது சுப்பிரமணி நர்சை பின் தொடர்ந்து சென்று திடீரென கட்டிப்பிடித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத கீதா அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியை தள்ளி விட்டார். இதில் ஆஸ்பத்திரியில் இருந்த கண்ணாடி கதவு உடைந்து தூளானது. இந்த சமயத்தில் சுப்பிரமணியை பிடிக்க முயன்ற கீதாவை கீழே தள்ளிவிட்டு அவர் தப்பியோடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த கீதா முடீஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் தோல்வி: 4–வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!
Next post சின்னமனூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை?