எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

Read Time:3 Minute, 9 Second

7c37ec2f-fbe4-473f-a633-a43d4809aa30_S_secvpfநாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரிய வந்தது.

எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்துவிட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்தப் பெண், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை நிஷா என்ற நூருன்னிசா

‘டிக்..டிக்..டிக்..’, ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி.

இவரைப் பற்றிய செய்திகள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவின. நாகை மாவட்டத்தை சேர்ந்த சில உள்ளூர் செய்திகளிலும் இந்த சோகக் கதை ஒளிபரப்பாகியது.

இந்நிலையில், இந்த செய்தி பற்றி அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக (தாமாக முன்வந்து தீர்த்து வைக்க நினைக்கும் பிரச்சனை) கையில் எடுத்துள்ளார்.

‘அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

‘போக்கிடம் இல்லாத, யாருடைய உதவியும் கிடைக்காத ஒரு பெண் போதிய கவனிப்பின்றி பொது வீதியில் உயிருக்கு மோசமான நிலையில் கிடக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற தகவல் அவருடைய வாழ்வுரிமையை மீறுவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது’ என நீதிபதி முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்” கொடுத்த, திகார் திகில் பார்ட்டிகள்!! -(வீடியோ)
Next post தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா!!