தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா!!

Read Time:1 Minute, 45 Second

eebd21a1-1111-48f0-b1a7-3e2a20108479_S_secvpfபிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் கமலஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் தமன்னாவும் மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.

சமந்தாவும் ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.

அந்த வகையில் இன்று திரிஷாவும் சென்னை அருகே உள்ள முடிச்சூர் கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு விலங்குகளுக்கான பாதுகாப்பு மையம் உள்ளது. அந்த மையத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளும் பணியில் திரிஷா ஈடுபட்டார். மேலும், அவர் தனது நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி மற்றும் சி.சி.எல். நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!
Next post பயமுறுத்திய யாமிருக்க பயமே படக்குழு சிரிக்க வைக்க வருகிறது!!