இருவர் பலியாகக் காரணமான லான்ஸ் கோப்ரல் மீண்டும் விளக்கமறியலில்!!
Read Time:1 Minute, 0 Second
போதையில் பவுச்சர் ஒன்றை செலுத்தி இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 16ம் திகதி (11.16) சந்தேகநபர் செலுத்திய பவுச்சரில் சிக்கி 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரும் பெண்ணொருவரும் பலியாகினர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த மேலும் அறுவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating