ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ளதாக தகவல்!!
Read Time:1 Minute, 15 Second
பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் நடைபாதை வாசி ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது சல்மான்கானின் ரத்தத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது 30 மி.கி அளவுக்கு தான் ரத்தத்தில் மது கலக்க அனுதியுள்ள நிலையில், சல்மானின் ரத்தத்தில் 62 மி.கி அளவுக்கு மது கலந்துள்ளதாக அவர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் சல்மான்கானும் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating