மகளுக்கு கருப்பையை பரிசாக கொடுத்த தாய்!!

Read Time:2 Minute, 42 Second

babyகுழந்தைகளை கருவில் சுமக்கும் தாய், அவர்களை பெற்றெடுத்து தந்தைக்கும், குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்து தானும் மகிழ்வார். ஆனால் லண்டனில் வசிக்கும் தாய் ஒருவர், தான் பெற்றெடுத்த மகளுக்கு தனது கருப்பையை பரிசாக தந்தார். அறுவை சிகிச்சை மூலம் அந்த கருப்பை அவரது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் திகதி அப்பெண் ஸ்வீடனில் வின்சென்ட் என்ற அழகான குழந்தையை பெற்றெடுத்தார். 29 வயதான அந்தப் பெண்னின் முதல் குழந்தையான இது 2.3 கிலோ எடை கொண்டிருந்தது. தாயின் கருப்பை மகளுக்கு பொருத்தப்படுவது உலகில் இதுவே முதல் முறை ஒரு தலைமுறைக்கு முன் தாங்கள் பூமிக்கு வரக் காரணமாயிருந்த கருப்பையை, தங்கள் குழந்தைகளுக்காக பயன்படுத்தி இதுவரை இரண்டு பேர் தாய்மையடைந்துள்ளனர்.

இவ்வாறு பிறந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தங்கள் தாயுடன் நலமாக இருக்கிறார்கள். இந்த சம்பவம் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பெற தவமிருக்கும் ஏழு பேருக்கும், கருப்பை இல்லாத, கருப்பை அகற்றப்பட்ட 15,000 பிரிட்டிஷ் பெண்களுக்கும் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கருத்தரிப்பு சமூகத்தின் தலைவர் ஆலன் பாசி புதிய அறுவை சிகிச்சை நடைமுறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும், இது வாடகைத் தாய் முறையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். ஏனென்றால் ‘தன் குழந்தை இன்னொரு பெண்னின் வயிற்றில் வளர்வதை விட தன் வயிற்றில் வளர்வதையே ஒரு பெண் விரும்புவாள்’ என்றார். லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் “ நிச்சயம் இது ஒரு தாய் தன் மகளுக்குக் கொடுக்கக் கூடிய அதி அற்புதமான பரிசு” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து!!
Next post நேபாளத்தில் திருவிழாவை காணச்சென்ற பீகார் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது!!