உ.பி.யில் செயின் பறிப்பு முயற்சியை தடுத்தவர் சுட்டுக்கொலை!!
உத்தர பிரதேசத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் வாலிபரை சுட்டுக்கொலை செய்துள்ளான்.
மீரட் மாவட்டம் கன்கார்கேடா பகுதியைச் சேர்ந்தவர் விரேந்திர சிங்கால் (வயது 50). இவரது உறவினர் அஸ்வனி குப்தா (வயது 30). இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்கள் உறவினர்களுடன் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து நகை பறிக்க முயற்சி செய்தனர்.
சுதாரித்துக்கொண்ட அஸ்வின் குப்தா, விரேந்திர சிங்கால் ஆகியோர் உறவினர்களின் நகைகளை பாதுகாக்க கொள்ளையர்களிடம் போராடினார்கள். இதனால், செயின் பறிக்கும் முயற்சி தோல்வியடைந்த கோபத்தில் கொள்ளையர்கள், இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
குண்டு காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விரேந்திர சிங்வால் பரிதாபமாக உயிரிழந்தார்.
Average Rating