ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு!!

Read Time:3 Minute, 3 Second

efb5827c-889b-4952-bc99-fbf0cd3b0708_S_secvpfஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை போலீஸ் எனக்கூறி அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர்.

பின்னர் அந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து 2 வாலிபர்களும் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர்.

தாங்கள் கற்பழித்ததை இருவரும் தனித்தனியாக செல்போனில் படம் எடுத்தனர். அதோடு அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கி அதன் நம்பரை ‘மிஸ்டு கால்’ மூலம் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் அந்த பெண்ணை விடுவித்த அவர்கள், ‘‘நாங்கள் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும். இது பற்றி போலீசிலோ அல்லது யாரிடமாவது புகார் செய்தால் செல்போனில் உள்ள கற்பழிப்பு காட்சியை இணைய தளத்தில் பரப்பி விடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு தப்பி விட்டனர். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

பயந்து போன காதல் ஜோடிகள் இது பற்றி யாரிடமும் புகார் செய்யாமல் இருந்தனர். ஆனால் அந்த காமுகர்கள் மறுநாள் செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை அழைத்தனர்.

இதனால் அந்த காதல் ஜோடி தனது நண்பர்களிடம் விவரத்தை கூறினார்கள். நண்பர்கள் அவர்களுக்கு தைரியமூட்டி ஹயத் நகர் போலீசில் புகார் செய்ய வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை கற்பழித்த சீனிவாசரெட்டி, லிங்காரெட்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இளம் பெண்ணை கற்பழித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

அவர்களது செல்போனை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் கற்பழிப்பு காட்சிகள் எதுவும் இல்லை. ஒருவேளை அதனை கம்ப்யூட்டருக்கு மாற்றி இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கைதான 2 வாலிபர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் செயின் பறிப்பு முயற்சியை தடுத்தவர் சுட்டுக்கொலை!!
Next post க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளிவரும் தெரியுமா?