இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!
யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்த 38 இந்திய மீனவர்கள் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (02) முதல் தம்மை விடுதலை செய்யக் கோரி இந்திய மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அக்கலந்துரையாடலின் போது, விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று கூறிய நிலையில், மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவு செய்யவில்லை.
நேற்று வியாழக்கிழமை மதியம் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் மீனவர்களை சந்தித்து, விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த பின்னர் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating