ரஜினி வழியை பின்பற்றும் நடிகர்.. என்ன காரணம்?

Read Time:1 Minute, 49 Second

vishalரஜினிகாந்த் வழக்கமாக இமயமலை சென்று வருகிறார். தன் படங்கள் வெளிவந்த பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று சில நாட்கள் தங்கி விட்டு வருவார். அந்த வழியில் தற்போது விஷாலும் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்.

விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து ‘ஆம்பள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப்பட வேலைகள் முடிந்தவுடன் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளாராம் விஷால். ஆம்பள படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்பட வேலைகள் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த இரண்டு படத்திற்கு இடைப்பட்ட வேளையில் இமயமலை சென்று விட்டு வர முடிவு செய்துள்ளார்.

இதற்கு முன் விஷால் 2011-ம் ஆண்டு இமயமலை சென்றுள்ளார். சில வருடங்களாக வேலையில் பிசியாக இருந்ததால் அங்கு செல்லாமல் இருந்திருக்கிறார். அங்கு ரெஜுவெனேஷன் என்னும் பகுதி விஷாலுக்கு பிடித்த இடமாம். இனி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இமயமலைக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதில்லை! தமிழக மீனவர்கள் முடிவு!!
Next post மனைவியின் தவறான தொடர்பை அறிந்த கணவன் தற்கொலை!!