ரஷ்ய அதிபர் புதின் 10-ம் தேதி இந்தியா வருகை: 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, 15 முதல் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15-வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் ரஷ்யாவின் அரசு உயர் அதிகாரிகள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.
11-ம்தேதி பிரதமர் மோடியுடன் மாநாட்டில் பங்கேற்கும் புதின், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்புத்துறை, அணுசக்தி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக 15 முதல் 20 ஒப்பந்தங்கள் வரை கையெழுத்தாகலாம் என தெரிகிறது. மேலும், பாராளுமன்ற கூட்டு அமர்விலும் புதின் உரையாற்றுகிறார்.
புதினும், மோடியும் இணைந்து இருநாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating