மாலைதீவுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை!!
மாலைதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அடுத்து இலங்கையில் இருந்து தண்ணீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.
அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது.
இந்நிலையில் மாலைதீவுக்கு குடிநீர் வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் குடிநீரை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating