எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி!!

Read Time:1 Minute, 35 Second

193717328Untitled-1எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒருலீற்றர் 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 165 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒருலீற்றர் 158 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் போஸ்டார் வகை டீசல் ஒரு லீற்றர் 140 ரூபாவில் இருந்து 133 ரூபாவாகவும், ஒடோ டீசல் ஒரு லீற்றர் 118 ரூபாவில் இருந்து 111 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருலீற்றர் மண்ணெண்ணெய் 86 ரூபாவில் இருந்து 81 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் விலை மாற்றத்திற்கு ஏற்ப எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற முடியவில்லை என நுகர்வோர் அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!
Next post கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்: இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு- கேரள வாலிபரை பிடிக்க வேட்டை!!