அஞ்சலியின் சூழ்ச்சி! ஆத்திரத்தில் அனுஷ்கா!!

Read Time:2 Minute, 14 Second

indian-gold1ஜெயம் ரவியுடன் ‘அப்பா டக்கரு’, விமலுடன் ‘ஆம்பள சிங்கம்’, கன்னடத்தில் ‘தீர ரன விக்ரமா’ என்ற மூன்று படங்களிலும் நடித்துவருகிறார் அஞ்சலி.

இந்தப் படங்களுக்குப் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை. அஞ்சலி விஷாலுடன் சேர்ந்து நடித்த மதகஜராஜா திரைப்படம் வௌியாகாமல் கிடப்பிலேயே உள்ளது. இந்த நேரத்தில் தான் அனுஷ்காவின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் அஞ்சலி.

ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த ‘லிங்கா’ வரும் 12ஆம் திகதி, ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகிறது. இது தவிர தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என்ற இரண்டு சரித்திர படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

இரண்டுமே இரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ள திரைப்படங்கள். அனுஷ்காவுக்கு 33வயது ஆகிறது. வேறு சில சரித்திர படங்கள் அனுஷ்காவுக்கு காத்திருக்க, ஆனால் அவரின் வயது காரணமாக வேறு நடிகைகளை தேர்வு செய்யும் முடிவில் இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

இதை சாக்காக வைத்து அனுஷ்காவுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கு எண்ணத்தில் அஞ்சலி அவரை கிண்டலாக பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில். அனுஷ்காவுக்கு வயதாகி விட்டது என்றும் என்னைப் போல் அவரால் நடிக்க இயலாது என்றும் எல்லா கேரக்டருக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று அஞ்சலி சொன்ன வார்த்தைகளை கேட்ட அனுஷ்கா கோபத்தில் கொந்தளித்து போய் உள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோழிக்கோட்டில் நாளை மீண்டும் முத்தம் கொடுக்கும் போராட்டம்!!
Next post காதலை விட மறுத்த மகளின் நாக்கை அறுத்த தந்தை!!