மனநலம் குன்றிய சிறுமியை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்துக் கொலை?
மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருநது மீட்கப்பட்ட நிலையில் அவரது தாய் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் நகரை சேர்ந்த ஆம்பர் கெய்ஸ் என்ற பெண்ணுக்கு ஐஹனா கோம்ப் என்ற 9 வயது மகள் இருந்தார். இவர் மனவளர்ச்சி குன்றியவர்.
தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லை என தாய் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் ஆம்பரின் மற்றோரு மகளும் மற்ற சிறுவர்களும் விளையாட்டாக குளிர்சாதனைப் பெட்டியைத் திறந்துள்ளனர். அப்போது அதில் ஒரு பகுதியில் சிறுமியின் பிணம் இருந்து உள்ளது.
இதனால் அலற அடித்து வீட்டை விட்டு குழுந்தைகள் வெளியே வந்தனர். உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் வந்து சோதனை செய்து பார்த்தனர். அதிலிருந்து 9 வயது சிறுமி கோம்ப்பின் இறந்த உடல் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக ஆம்பர் கெய்ஸ் மீது தனது மகளைப் படுகாயப்படுத்திக் கொலை செய்ததாக புகார் பதிவு செய்துள்ளனர். விசாரணையின்போது ஆம்பர் கூறுகையில்,
கடந்த ஜனவரி 29ஆம் திகதி எனது மகள் எழுந்திருக்கவில்லை. பலமுறை எழுப்பிப் பார்த்தும் அவள் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து ஒரு துணியில் சுற்றி பிரிட்ஜுக்குள் வைத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
ஆம்பர் கெய்ஸ் குழந்தைக்கு சரியாக சாப்பாடு கூட தராமல் இருந்துள்ளார். மேலும் குழந்தையை வைத்திருந்த குளிர்சாதனைப் பெட்டியை தொடர்ந்து பல நாட்களாக எந்த வித சலனமும் இல்லாம் பயன்படுத்தி வந்து உள்ளார்.
Average Rating