இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!!

Read Time:1 Minute, 54 Second

208334666Untitled-1திருப்பதிக்கு வரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் 10-ம் திகதி திருப்பதிக்கு வந்து வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யவிருக்கிறார்.

இலங்கையில் தமிழர் பகுதியில் 1,750 இந்து கோயில்களை இடித்து, தமிழர் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தவர் மஹிந்த ராஜபக்ஷ. பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் வீசி கோரப் படுகொலைகளை செய்தவர் அவர்.

இவர், மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1,200 பேருடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம். ஏற்கனவே, திருப்பதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்தபோது, காவல்துறையின் தடைகளைத் தாண்டி மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டினர்.

அதேபோல இந்த முறையும் திருப்பதிக்கு வரவிருக்கும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்தார், என தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமக்கல் அருகே இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post அழகால் மாரடைப்பு ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் தமன்னா!!